இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் அநுரகுமார

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவலை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது பிராந்திய பாதுகாப்பு இந்தியா இலங்கையுடன் தொடர்புபட்ட இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத்தும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.