அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஈரானிய அகதி வழக்கு

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவை வந்தடைந்த ஈரானிய அகதியான Payam Saadat, அவுஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 5 ஆண்டுக்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக மனநலச் சிக்கல்களை இன்றும் எதிர்கொண்டு வருவதாக  தெரிவித்திருக்கிறார்.

29 நாட்கள் படகு வழிப் பயணம் மூலம் அவுஸ்திரேலியாஅடைந்த அவர், 2000 முதல் 2002 வரை மேற்கு அவுஸ்திரேலியாவின் Curtin குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் சுமார் 3 ஆண்டுக்காலம் தெற்கு அவுஸ்திரேலியா வில் உள்ள Baxter தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.

இவ்வாறான சூழலில், அவுஸ்திரேலிய அரசு மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களை நிர்வகித்த வந்த 2 தனியார் நிறுவனங்கள் மீது தற்போது ஈரானிய அகதியான Payam Saadat வழக்குத் தொடுத்திருக்கிறார்.

அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மட்டத்தில் முக்கியமானதாக அணுகப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு, ஈரானிய அகதிக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் மேலும் பல அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் எனக் கருதப்படுகின்றது.

ஈரானிய அகதியின் வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த 12 வாரங்களுக்கு நடைபெறும் என எண்ணப்படுகின்றது.