அல்குவைதா இராணுவத் தலைவர் பலி – பிரான்ஸ் அறிவிப்பு

அல்குவைதா இராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

அல்குவைதா அமைப்பானது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆபிரிக்காவில் உள்ள சாஹேல் என்ற  பிராந்தியத்தில் அந்த அமைப்பு இயங்கி வருகின்றது. இந்நிலையில், அல்குவைதா இராணுவத் தலைவரான பாக் ஹக் மவுசா என்பவர் மாலியில் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இது பெரும் வெற்றி என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

சாஹேல் பிராந்தியத்தில் புலனாய்வு அமைப்புகள், தரைப்படைகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் மவுசா பலியானதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.