அரியாலை கடலட்டை தொழிற்சாலை பணிப்பாளர்களாக இரண்டு சீனர்கள்!

அரியாலையில் இயங்கி வரும் கடல் அட்டைத் தொழிற்சாலையில் சீனர்கள் பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் இந்த கடலட்டை தொழிற்சாலை சீனர்களையும் பணிப்பாளர்களாக உள்ளடக்கி இலங்கை கம்பனி பதிவுச் சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்டுள்ளமை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

‘குயிலன் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கடலட்டை நிறுவனத்தின் 3 பணிப்பாளர்களில் ஒருவராக நீர்கொழும்பைச் சேர்ந்த தம்மிக்க டி சில்வா என்பவரது பெயர் பதிவாகியுள்ளது

ஏனைய இருவரும் சிச்சாவே லீ மற்றும் யுவான் சென் ஆகிய சீனர்களாவர். இவர்களின் வதிவிட முகவரியும் ஒப்பந்தத்தில் சீனா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனப் பதிவு ஒப்பந்தம் கடல் தொழில் சார்ந்ததாக இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை அமைக்க தேவையான பரப்பளவு, கொடுப்பனவுகள், பங்குதாரர்களுக்கு இடையிலான பங்கீடுகள் என்பதை குறித்தும் இந்த தொழிற்சாலை பதிவு ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.