உலகின் முதல் மின்சார தானியங்கி கப்பல்: நோர்வேயில் அறிமுகம்

உலகின் முதல் மின்சார தானியங்கி கப்பல்

நோர்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான ‘யாரா இன்டர்நேஷனல்’ நிறுவனம்  உலகின் முதல் மின்சார தானியங்கி கப்பல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

யாரா பிர்க்லேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள 80 மீட்டர் நீளமுள்ள இந்த மின்சார தானியங்கி   சரக்கு கப்பல் ,  சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கப்பல் இந்நிறுவனத்தின் 40,000 டீசல்  பார ஊர்தி போக்குவரத்துக்கு மாற்றாக விளங்கும் என்றும் இதனால் ஆண்டுக்கு 1000 டன் கார்பன் வெளியேற்றம் குறையும் எனவும் கூறப்படுகின்றது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வெய்ன் தோர் ஹோல்ஸ்தர்  தெரிவிக்கையில்,

“மின்சார மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கப்பலை உலகிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்வதன்மூலம் மிகப்பெரிய மாற்றத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம். இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல நீர்வழித்தடங்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.