இலங்கைக்கு அமெரிக்கா 1.5 மில்லியன் (Moderna) மொடேர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கியுள்ளதை அமெரிக்க உயரதிகாரி சமந்தா பவர் (US Agency for International Development (USAID) Administrator Samantha Power) வரவேற்றுள்ளார்.
இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப் படடுள்ளமை உயிர்களை காப்பாற்ற உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோவிட் 19க்கு எதிரான நடவடிக்கைக்கு USAID ஆரம்பம் முதல் அவசர மருத்து விநியோகங்களையும் முக்கிய உதவிகளையும் வழங்கி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.