மலையக மக்களுக்கு விசேட பொருள் விநியோக திட்டங்கள் தேவை- பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

மலையக மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்ட குறிப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருட்களின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

எரிபொருட்களை பெறுவதற்கான வரிசைகளும் பல கிலோமீட்டர் வரை நீண்டு செல்வதோடு எரிபொருட்களை பெற பல நாட்கள் தொடர்ந்து வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வழமையான நாட்களிலேயே முறையான விநியோக வழிமுறையில்லாத மலையக பகுதிகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் உடனடியாக மலையக மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்” என்றார்.

Tamil News