​நா​டாளு​மன்​ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால் அமெரிக்​கர்​களுக்கு தலா 5,000 டொலர்: ட்ரம்ப் வாக்குறுதி

மெரிக்க நாடாளு​மன்​ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் தலா 5,000  டொலர்கள் வழங்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்​துள்​ளார்.

டல்​லாஸ் நகரில் புதனன்று நடை​பெற்ற குடியரசுக் கட்​சி​யின் மாநாட்​டில் அதிபர் ட்ரம்ப் பேசுகை​யில், “வரும் நவம்​பர் மாதம் நடை​பெறவுள்ள இடைத்​தேர்​தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்​றால், உங்​களுக்​கும் வெற்றி நிச்​ச​யம். ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் 5,000 டொலர்கள் கிடைக்​கும். இது ட்ரம்ப் ஈவுத்​தொகை என அழைக்​கப்​படும்” என்று  அறிவித்துள்ளார்.