சாந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவஞ்சலி

9 2 சாந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவஞ்சலிஇந்தியாவிலிருந்து நாடு திரும்பத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் நேற்று நினைவுகூரப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட போராளிகள் நலனுபுரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் ‘சாந்தன் ஏன் சந்தனமானார்?” எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சாந்தனின் உருவப்படத்திற்கு மலர்தூவி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ. சரவணபவன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம், தவத்திரு வேலன் சுவாமிகள், செஞ்செற்செல்வர் ஆறு. திருமுருகன் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சாந்தனின் தாயார் மற்றும் சகோதரர்களிடம் போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால் அவரின் திருவுருவப்படம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் புத்தகப் பைகள் என்பன வழங்கப்பட்டன