சித்திரவதை விவகாரம்: ஐ.நா உபகுழு பிரதிநிதிகள் இலங்கை வருகை

தமது வருகை,  சித்திரவதைத் தடுப்புப் பொறிமுறையின் செயற்திறனை மதிப்பிடுவதையும், கடந்த காலங்களில் எமது பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றி ஆராய்வதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது’ என ஐ.நா உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தெரிவித்துள்ளார்.

இலங்கையில்  கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவும், சித்திரவதைகள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் திங்கட்கிழமை (15) சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

‘நாம் இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் அரசாங்கம் சித்திரவதைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக தேசிய தடுப்புப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சித்திரவதைகளைத் தடுப்பதை இலக்காகக்கொண்ட பயணத்தில் முக்கிய நகர்வாகும்’ எனச் சுட்டிக்காட்டியுள்ள சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது, ‘எமது தற்போதைய விஜயமானது சித்திரவதைத் தடுப்புப் பொறிமுறையின் செயற்திறனை மதிப்பிடுவதையும், கடந்த காலங்களில் எமது பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள என்பது பற்றி ஆராய்வதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.