அதிகாரத்தைப் பிரயோகப்படுத்துவதில் பின்நிற்கப் போவதில்லை-இராணுவத் தலைமையகம் அறிவிப்பு

பொதுச்சொத்து, அனைத்து கேந்திர நிலையங்கள் மற்றும் மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பிரயோகப்படுத்துவதில் எவ்விதத்திலும் பின்நிற்கப் போவதில்லை எனவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினருக்கோ அல்லது மக்கள் சொத்துக்களுக்கோ பாதிப்புகளை ஏற்படுத்துவது மற்றும் வன்முறையை அதிகரிப்பதற்கு செயற்படும் அனைவரும் உடனடியாக அந்த வன்முறை நடவடிக்கைகளிலிருந்து விலக வேண்டும் என்றும் அவ்வாறின்றேல் நாட்டின் நிலைமைகளுக்கிணங்க பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் முழுமையாக உபயோகிக்க வேண்டிவரும் என்றும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து கேந்திர நிலையங்கள் மற்றும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குமான பொறுப்பு இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக இராணுவத்தினர் தமக்குள்ள அதிகாரங்களை முழுமையாக பிரயோகிக்க வேண்டிவரும். அதற்கான பொறுப்பை போராட்டக்காரர்களே ஏற்க நேரிடும் என்றும் இராணுவத் தலைமையகம் மேலும்  தெரிவித்துள்ளது.