பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஒப்பந்தத்தில் இல்லை !

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பின் போது வழமைக்கு மாறாக மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டும். அப்போது தான் புதிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏதும் உள்ளடக்கப்படவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்  சமன்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

இன்று (09) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இதனை தெரிவித்தார்.