இலங்கை நெருக்கடி: “இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும்“ -நிதியமைச்சர்

இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக நிலவும் மின்சாரத்தடை மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு ஆகியவை, நாடு முழுவதும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய அலி சப்ரி, நிலைமையின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து கொள்கிறார்களா என்று தமக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது, எனினும் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் இந்த பிரச்னைக்கான தீர்வின் காலத்தை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News