தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா? என்பது குறித்து ஆராய்வதற்காக ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் திகதியில் பிரதிவாதி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்படும். அதன் பின்னரே வழக்கின் விசாரணை பற்றி ஆராயப்படும்.
இன்று (13) இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே வழக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்று (13) வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. எனினும் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.