பயங்கரவாத தடை சட்டத்துக்கான திருத்தங்கள் ஆரோக்கியமானதா? சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா விசேட செவ்வி

பயங்கரவாத தடை சட்ட திருத்தங்கள் ஆரோக்கியமானதா? 

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கான சில திருத்தங்களை அரசாங்கம் முன்வைத்திருக்கின்றது. அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று பாராளுமன்றத்திலும் இந்தத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஜெனீவாவிலும் கடந்த வருட தீர்மானத்திலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதன் மூலமாக சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க முடியும் என இலங்கை அரசாங்கம் கருதுவதாகத் தெரிகின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளில் கடந்த சுமார் 42 வருட காலமாக முன்னிலையாகி வரும் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகருமான கே.வி.தவராஜா உயிரோடை தமிழ் வானொலிக்கு அளித்துள்ள செவ்வியின் முக்கியமான பகுதிகளை இங்கு தருகிறோம்.

Tamil News