தமிழீழ தேசிய கொடி நாள் நவம்பர் 21

தமிழீழ தேசிய கொடி நாள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் “நவம்பர் 21ம் திகதி தமிழீழ தேசிய கொடி நாள்” ஆக அறிவிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அன்று ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பல தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒக்ஸ்போர்டில்    (Oxford ) அமைந்துள்ள தமிழர் வரலாற்று மையத்திலிருந்து (WTHS) தமிழீழத் தேசியக்கொடி பவனியாக Trafalgar Sqare, London நோக்கி 21 ம் திகதி கொண்டு வரப்பட்டு அங்கு எமது தமிழீழ தேசியக்கொடி பட்டொளி வீச ஏற்றப்பட்டு கொண்டாடப்பட இருக்கின்றது.

அத்துடன் இதற்கான சுவரொட்டிகள் நாடு கடந்த தமிழீழ் அரசாங்க உறுப்பினர்களால் இலண்டனில் வழங்கப்பட்டும் வருகின்றது. இந்த நிகழ்வுக்கு அனைத்து தமிழ் மக்களையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.