அமைதியான போராட்டங்களுக்கு ஆதரவு- அமெரிக்க தூதுவர்

அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனைவரும் சுதந்திரம் இருக்க வேண்டும்.  இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம்.   இவ்வாறானவர்களை கைது செய்யக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.