சூடான் ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவத்தை எதிர்த்து சாலையில் இறங்கிப் போராடிய போராட்டக்காரர்களை நோக்கி, சூடான் இராணுவத்தினர் சுட்டதில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 140 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது சூடானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆட்சிக் கவிழ்ப்பை உலக நாடுகள் பல கண்டித்துள்ளன.
இதே நேரம் அமெரிக்கா சூடானுக்கு வழங்கவிருந்த $700 மில்லியன் நிதி உதவியை நிறுத்தியுள்ளது.