இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்: பதில் ஜனாதிபதி ரணில் நடவடிக்கை

இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக இடைக்கால பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில்  நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்று அமைதியின்மையை கட்டுக்குள் கொண்டுவர ஞாயிற்றுக்கிழமை அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பதில் ஜனாதிபதி ரணில் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல்,சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.