சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெற இலங்கை அமைச்சர்கள் ரஷ்யா பயணம்

கச்சா எண்ணெய் பெற இலங்கை அமைச்சர்கள் ரஷ்யா பயணம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க ரஷ்யா மற்றும் கத்தார் நாடுகளிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெறுவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.

அதில் முதல் கட்டமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவது குறித்துப் பேசி முடிவெடுப்பதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர்  ரஷ்யா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுபற்றி இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரா கூறுகையில், “2 நாட்களுக்கும் குறைவான தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே எரிபொருள் இருப்பு உள்ளது. அது அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்காக தேசத்திடம் மன்னிப்பு கோருகிறோம். சலுகை விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்கிறார்கள். அங்கு அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிப்பார்கள்” என்றார்.

Tamil News