இலங்கை-கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பால் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக குற்றச்சாட்டு

சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு காரணமாக தேசிய பூங்காக்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது என இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மின்னேரிய, சோமாவதி, வஸ்கமுவ, மதுருஓயா, ஜலகெலும் நிம்னா தேசிய பூங்கா மற்றும் ஏனைய வனப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்துள்ளதாக சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்த்துள்ளார்.

சந்தையில் கோழி இறைச்சியின் விலை வேகமாக உயர்ந்து வருவதால் வன விலங்குகளை வேட்டையாடும் தேவை அதிகரித்துள்ளது.

எனவே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றி இலங்கையின் காடுகளையும் வனவிலங்கு வளங்களையும் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமது கடமைகளை குறைக்க வேண்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.