ஐ.நா தீர்மானத்துடன் நாங்கள் உடன்படப் போவதில்லை-இலங்கை

285 Views

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் தீர்மானம் நியாயமற்றது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்தத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த இலங்கை கோரும் எனவும் கூறியுள்ளார்.

இந்தத் தீர்மானம் இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது. தீர்மானத்துடன் நாங்கள் உடன்படப் போவதில்லை. நாம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் இதை எதிர்கொள்வோம். சமரசம் செய்ய முடியாத விடயங்கள் தீர்மானத்தில் உள்ளன. நட்பு நாடுகளை இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கக் கோருவோம் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

Leave a Reply