வரும் மாதங்களில் விலைவாசி உயர்ந்து நிலைமை இன்னும் மோசமாகும்- ரணில்

இலங்கையில் வரும் மாதங்களில் நாட்டில் விலைவாசி உயர்ந்து நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போராடும் மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை எனில் அரசு பதவி விலக வேண்டும் என்றார்.

மேலும் பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் இலங்கையில் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய அரசை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்றும்  ரணில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 4 முறை பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, அதிக காலம் அந்தப் பதவியில் இருந்தவர். இறுதியாக 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரை அவர்  பிரதமராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- பிபிசி தமிழ்

Tamil News