அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துப்பாக்கிச் சூடு- 10க்கும் மேற்பட்டவர்கள் காயம்

நியூயார்க் நகரில் துப்பாக்கிச் சூடு

நியூயார்க் நகரில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இன்று காலை  சன்செட் பூங்காவில் உள்ள 36வது வீதி என்ற தொடருந்து நிலையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய சந்தேக நபரை தேடும் பணி காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.