சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் மேலும் ஏழு பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக தாக சந்தேகிக்கப்படும் 7 பேரை கடற்படையினர் கைது செய்துள்ள அதேவேளை இவர்களை ஆட்கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கடல் வழியாக சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடத்தல்களை தடுக்கும் நோக்கில் கடற்படையினர், நாட்டை சூழவுள்ள கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், வடமத்திய கடற்படை கட்டளைப்பிரிவினர் தலைமன்னார் பகுதியில் படகு மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக முறையில் பயணித்த மீன்பிடி படகு ஒன்றை சுற்றிவளைத்த போது, அதிலிருந்த சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவர் , 3 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் அவர்களுடன் 2 ஆட்கடத்தல்காரர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி மற்றும் பேசாலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.