பாடசாலைகள் மீளவும் இம்மாதம் திறக்கப்படும்! ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி

Schools.800 பாடசாலைகள் மீளவும் இம்மாதம் திறக்கப்படும்! ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இந்த மாத இறுதிக்குள் மீளத்திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று மாலை அறிவித்துள்ளார்.

அதற்கமைய பாடசாலைகள் திறக்கப்பட முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி நிச்சயம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

50 மாணவர்களுக்கும் குறைவான 1439 பாடசாலைகள், 50 தொடக்கம் 100 மாணவர்கள் வரையான 1523 பாடசாலைகள் என 2962 பாடசாலைகளை மீளத்திறக்க உத்தேசித்திருப்பதாகவும், சுகாதார நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றவுடன் இறுதி முடிவை எடுப்பதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.