தாய்லாந்தின் Tak மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடிய 2 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் Mae Sot நகரத்தில் சுற்றித்திரிந்த நிலையில் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பணியாற்றி வந்த சூழலில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்தவர்கள்.
தடுப்பு மையத்தில் கொரோனா தொற்றக்கூடும் என அச்சத்தை இந்த சீனர்கள் வெளிப்படுத்தியதால் பிணை வழங்கப்பட்டு ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள நீதிமன்றம் இவர்களை அனுமதித்து இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.