கடந்த 2013ம் ஆண்டு மியான்மரிலிருந்து வெளியேறிய ஜைவெட் ஏலோம் இந்தோனேசியா சென்றடையும் முன்பே அவர் சென்ற பிறகு விபத்துக்கு உள்ளாகி மூழ்கத் தொடங்கியிருக்கிறது. நீச்சல் அறியாத அவரையும் இன்னும் பிற அகதிகளையும் மீனவர்கள் காப்பாற்றி இருக்கின்றனர்.
இப்படகிலிருந்து கடலில் விழுந்த ஒரு சிறிய குழந்தை மீண்டும் மீழவில்லை என்கிறார் ஏலோம். “ஒரு தாய் தனது அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பி கதறினார். அது ஒரு பெரும் அதிர்ச்சியூட்டிய நிகழ்வு,” என கூறுகிறார் ஏலோம்.
பின்னர் பல ஆண்டுகள் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் கழித்த நிலையில் அங்கிருந்து தப்பி இப்போது கனடாவில் தஞ்சம் பெற்று வாழ்ந்து வருகிறார். அத்துடன் தனது ரோஹிங்கியா சமூகத்துக்கு குரல் கொடுப்பவராகவும் ஜைவெட் ஏலோம் இருக்கிறார்.
அவரது அனுபவத்தை விளக்கும் ‘Escape from Manus’ என்ற நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.