நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் முன்பாக அகதிகள் போராட்டம்

நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி

அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கான் அகதிகளுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி வலியுறுத்தி கன்பராவிலுள்ள நாடாளுமன்றம் முன்பாக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில், நாடு முழுவதிலிருந்தும் வந்த ஆப்கான் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், அகதிகள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி அவுஸ்திரேலியா வந்த அகதிகளுக்கு, நிரந்தரவதிவிட உரிமை வழங்கப்படவேண்டுமென போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

Tamil News