24 மணி நேர காலப்பகுதியில் 41.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

24 மணி நேர காலப்பகுதியில் 41.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

நேற்று காலை 8.30 மணி முதல் இன்று (09) காலை 8.30 மணிவரையான நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 41.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் அதிக மழை வீழ்ச்சி என்பதுடன் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று காலை 8.30 மணிவரை நிறைவடைந்த காலப்பகுதியில் 1230 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது இக்கால நிலை மாற்றம் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார் .

வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழையினால் மக்களின் இயல்பு நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் மழை வெள்ளத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கன மழையினால் பாடசாலை செல்லும் மாணவர்கள் மிகவும் குறைந்தளவில் இன்று பாடசாலை சென்றுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதுடன் பயிர் நிலங்களின் மழை வெள்ளம் பகுந்துள்ளதோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளன.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad 24 மணி நேர காலப்பகுதியில் 41.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு