ஜனநாயாக விழுமியத்தை பேணுவதற்க்கான கடப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்- கஜேந்திரகுமார்

ஜனநாயாக விழுமியத்தை பேணுவதற்க்கான கடப்பாட்டை உறுதிப்படுத்த சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையை ஆற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்;

”புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அவர்கட்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.முன்னெப்போதும் இல்லாதவாறு ஒருமுனைப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களை கொண்ட நாடாளுமன்றாக இந்த 9 வது நாடாளுமன்று விளங்குகிறது.

இந்த ஒரு முனைப்படுத்தப்பட்ட நாடாளுமன்றில் மறுபக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் எமக்கு மக்கள் அளித்துள்ள ஜனநாயக ஆணைக்குரிய மதிப்பையும் கெளரவத்தையும் கொடுத்து எமது மக்களின் ஜனநாயக ஆணை தொடர்பிலான நேர்மையான கலந்துரையாடல்களுக்கும் இடம் வழங்குகின்ற ஜனநாயாக விழுமியத்தை பேணுவதற்க்கான கடப்பாட்டை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் உங்களை கேட்டுக்கொள்கிறேன்”  என்கிறார்