பொருளாதார நெருக்கடிகளால் பொது மக்கள் பாதிப்பு-போரதீவுப்பற்று பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

பொது மக்கள் பாதிப்பு

பொது மக்கள் பாதிப்பு

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதாக தெரிவித்து இன்று மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 50-ஆவது சபை அமர்வானது இன்று போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் இரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.
இன்றைய சபை அமர்வில் 49 அமர்வின்  கூட்டறிக்கை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போரதீவுப்பற்றில் இயங்கும் எரிபொருள் விற்பனை நிலையங்கள் சாதாரண மக்களுக்கு எரிபொருளை வழங்காமல் வசதி படைத்தவர்களுக்கு வழங்குவது குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

அத்துடன் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று  பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்  அனைவரும்  நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார பிரச்சினைக்கு எதிராக  கவனிப்பு போராட்டத்தினை சபையில் முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் சபையில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் தமிழர் ஐக்கிய சுதந்திரக்கட்சியின் சுயேட்சைக்குழு உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News