ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல் கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ. செய்தி முகமை தனது ட்விட்டர் செய்தில் குறிப்பிட்டுள்ளது.
Have not yet received President Gotabaya Rajapaksa's resignation: Sri Lanka's Parliament Speaker
Read @ANI Story | https://t.co/kYR2434Ua1#SriLankaParliamentSpeaker #GotabayaRajapaksa #SriLankaCrisis #SriLanka #GotabayaRajapaksaResignation pic.twitter.com/3zlV7i9BX6
— ANI Digital (@ani_digital) July 13, 2022
இலங்கை தலைநகர் கொழும்பில் ஜூலை 9ம் திகதி நடந்த போராட்டத்துக்குப் பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகத் தயார் என தனக்கு அறிவித்ததாக பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன” தெரிவித்திருந்த நிலையில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் மாலைதீவுக்கு பயணமாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று சிங்கப்பூர் செல்ல தீர்மானித்துள்ளதாவும், அதன் பின்னர் இன்று இரவு அபுதாபி செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.