பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானம் விபத்து – இதுவரையில் 40 பேர் மீட்பு

planecrashmanila d பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானம் விபத்து - இதுவரையில் 40 பேர் மீட்பு

92 பாதுகாப்பு படையினருடன் பயணித்த  பிலிப்பைன்ஸ் விமானப்படை சி -130 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வித்துக்குள்ளாகி எரிந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து 40 பேர் வரை இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் 17 பேர் மரணித்துள்ளனர் எனவும் பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தெற்கு சுலு மாகாணத்தில் உள்ள மலை நகரமான பாட்டிகுலில் உள்ள ஒரு கிராமத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெற்கு ககாயன் டி ஓரோ நகரத்திலிருந்து படையினரை ஏற்றிச் சென்ற இந்த விமானம் சுலுவில் உள்ள ஜோலோ துறைமுக விமானத் தளத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.