பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிக்கை மக்கள் கையெழுத்துப் போராட்டம்-தொடக்கி வைத்தார் சுமந்திரன் எம்.பி.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாகஇலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி பொது மக்கள் கையெழுத்துப் போராட்டத்தை முல்லைத்தீவில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று முல்லைத் தீவு ஊடக அமையத்தில் தொடக்கி வைத்தார்.

அங்கு ஊடக சந்திப்பையும் அவர் நடத்தினார் இதில் நடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், எஸ்.சுகிர்தன் மற்றும் இலங்கைத் தமி ழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் ஆகியோரும் கலந்துகொண்டு கையெழுத்துப் போராட் டத்தைத் தொடக்கி வைத்தனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக் கக் கோரிய கையெழுத்துப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந் திரன் எம்.பி., இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் மிகமோசமான சட்டமாக இருக்கின்றது. இது 6 மாத காலத்துக்கு தற்காலிக சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. ஆனால், 42 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கின்றது.

விசேடமாக தமிழ் இளை ஞர்களை நசுக்குகின்ற – ஒடுக்கி ஆழ்கின்ற சட்டமாக சர்வதேச விழுமியங்கள் எல் லாவற்றையும் புறந்தள்ளிச் செயற்படும் சட்டமாக இது இருக்கின்றது. இது நீக்கப்படும் என்று இலங்கை அரசு தெளிவாக சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. அவ்வாறு நீக்குவதற்கான முயற்சியும் சென்ற அர சின் காலத்தில் இடம்பெற்றுள்ளது. அது முழுமை பெறவில்லை.

ஆனால், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சீர்திருத்துகின்றோம் என்று சொல்லி எந்த வித உப்புச்சப்பில்லாத ஒரு சீர்திருத்த மாக அறிவிக்கப்படுகின்ற ஒரு வர்த்தமானி பிரசுரம் வந்துள்ளது. அது நடைமுறையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அமுலில் எந்த மாற் றத்தையும் செய்யப் போவதில்லை.

ஆகவே, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு – விசேடமாக ஜரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றுவதற்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது; அவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் இது செய்யப் படுகின்றது. அவர்கள் எல்லோருக்கும் விளக்கமாக விடயங்களை அறிவித் துள்ளோம்.

இந்தத் தருணத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவோம் என்று அரசு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப் படவேண்டும். அந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எங்கள் மக்கள் நேர டியாகவே கோருகின்ற ஆவணத்தில் கையெழுத்திட்டு இதற்கான போராட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றோம். இது எட்டு மாவட்டங்களிலும் மக் களிடத்தில் வீடு வீடாகச் சென்று வீதி வீதி யாகச் சென்று மக்களின் கையெழுத்து வாங்கி இன்று ஆரம்பித்து வைக்கின்றோம்.

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி கையெழுத்துப் போராட்டத்தை மக்களிடத்தில் முன்கொண்டு செல்ல வுள்ளது. யாழில் நடைபெறுகின்ற மீனவர்க ளின் போராட்டத்தைக் கருத்தில்கொண்டு அந்தப் போராட்டம் ஒரு முடிவு வந்த பின் னர் கையெழுத்துப் போராட்டத்தை முழு வீச்சாகச் செயற்படுத்துவோம் எனவும் தெரிவித்தார் சுமந்திரன்.

Tamil News