இலங்கையை போன்ற பெரும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்

இலங்கையை போன்ற பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தானில் பல மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி வாங்க அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பெரும் சிக்கலுக்கு அந்நாடு ஆளாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டொலருக்கு 185 ரூபாய் என்ற அளவில் சரிந்துள்ளது.

பாகிஸ்தானில், டொயோட்டா கார் உற்பத்தி ஆலை, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே உட்பட பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சர்வதேச நிதியமான கடன் வாங்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. சிக்கன நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில நிபந்தனைகளுடன் கடன் வழங்க முன் வந்தன. இருப்பினும் நெருக்கடியை சமாளிக்கும் நிலை பாகிஸ்தான் இல்லை. பாகிஸ்தானிலும் அந்நியச் செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்துள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நெருக்கடி இப்போது பாகிஸ்தானிலும் காணப்படுகிறது.

Tamil News