இலங்கை இனவழிப்பு அரசின் தமிழர் மீதான தொடர்சியான இனவழிப்பிற்கு எதிராக கண்டன ஒன்றுகூடல் ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுள்ளது.
மேலும் தாயகத்தில் நடைபெறும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான நடைபயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தமிழரின் பிரேரணையைப் பலப்படுத்துவதற்காகவும் இந்த கண்டன ஒன்றுகூடல் அங்கு வாழும் தமிழர்களினால் நடத்தப்பட்டுள்ளது.