க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் இம்முறை சாதாரண தரபரீட்சைக்கு வவுனியாவில்4956 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 43 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்பு காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 517496 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 407129 பாடசாலை பரீட்சார்த்திகளும்110367 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.