இலங்கைக்கு அவசர உதவியாக நியூசிலாந்து 800,000 டொலர்களை வழங்குகிறது

பொருளாதார நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைச் சிறுவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக நியூசிலாந்து UNICEF நிறுவனத்திற்கு 800,000 டொலர்களை வழங்கவுள்ளது.

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் Nanaia Mahuta இதனை ட்வீட் செய்துள்ளார்,

நியூசிலாந்து, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கைக்கு மீட்சிக்கான பாதையை வகுக்க உதவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News