ஒன்பது மாகாணங்களிலும் குழந்தை பொறுப்பேற்கும் மையங்களை NCPA முன்மொழிகிறது

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிசு பொறுப்பேற்கும் மையங்களை நிறுவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCPA தலைவர் உதயகுமார அமரசிங்க, முன்மொழியப்பட்ட குழந்தை பெறும் மையங்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒப்படைக்க அனுமதிக்கும் என்று கூறினார்.

நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமரசிங்க, பல்வேறு காரணங்களால் புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோருக்கு உதவுவதற்காக 2021 ஆம் ஆண்டு NCPA யினால் சிசு பொறுப்பேற்கும் நிலையங்கள் தொடர்பான முன்மொழிவு வரையப்பட்டதாகக் கூறினார்.

இந்த பிரேரணை 2021 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்த அமரசிங்க, எனினும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அமைச்சரவை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சிசுக்களை பெற்றுக்கொள்ளும் நிலையங்கள் இந்தியாவில் பிரபலமாக உள்ளதாக சுட்டிக்காட்டிய NCPA தலைவர் உதயகுமார அமரசிங்க, இலங்கையில் அண்மைக்காலமாக சிசுக்கள் கைவிடப்படுவது அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான நிலையங்களை ஸ்தாபிப்பது அவசியமானது எனவும் தெரிவித்தார்.

நன்றி – தினக்குரல்