இயற்கை விவசாயம் – யாழ். பல்கலை முன்மாதிரி

யாழ். பல்கலை முன்மாதிரி

யாழ். பல்கலை முன்மாதிரி: யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும் விவசாயப் பண்ணை மற்றும் பயிற்சி மையம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட இயற்கைப் பசளை பயன்பாட்டு விவசாயத்தின் மூலம் பயிரிடப்பட்ட நெல் அறுவடை, கடந்த புதன்கிழமை (9) வன்னிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பரசன்குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெல்லின் அறுவடையானது, யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறீசற்குணராஜாவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கிளிநொச்சியில் அமைந்துள்ள விவசாய பீடத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முற்றுமுழுதான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பசளையைப் பயன்படுத்தி, செய்யப்பட்ட இந்த விவசாயத்திற்குத் தேவையான பசளையை உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் முறைகளை விவசாயபீட மாணவர்கள் மேற்கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News