ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்க எம்பீகளை மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும் – மனோ கணேசன்

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்க

ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்க 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம் எனத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கோருவோம் என்றார்.

மேலும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் மனசாட்சிபடி வாக்களிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார், மனசாட்சியை மறந்துவிட்டு வாக்களிப்பவர்கள் யார் என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்களும், வெளியே போராடும் மக்களும் அறிந்துகொள்ளலாம்.

முதலில் இவரது அதிகாரங்களை பிடுங்க வேண்டும். அதைவிடுத்து இவருக்கு கீழே “காபந்து” அரசு அமைத்தால், அது “கால்பந்து” அரசாகவே அமையும் என்றும் மனோ கணேசன் தனது முகநுாலில் கூறியுள்ளார்.