இலங்கை விவகாரம் தொடர்பில் ஜோ பைடனுடன் மோடி கலந்துரையாடல்

ஜோ பைடனுடன் மோடி கலந்துரையாடல்

ஜோ பைடனுடன் மோடி கலந்துரையாடல்

பெரும் பொருளாதார சிக்கலுக்குள் அகப்பட்டுள்ள இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான சந்திப்பு, நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது, உக்ரைன்,பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் நிலைமைகள் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடியதாக, இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.