கென்யாவில் அரசின் ஊழல்கள் மற்றும் காவல்துறையி னரின் வன்முறைகளுக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத் தில் கடந்த புதன்கிழமை(25) 23 பேர் கொல்லப்பட்டதுடன், 400 பேர் காயமடைந்துள்ளதாக கிழக்கு ஆபிரிக்க தேசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 23 மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள் ளன. கொல்லப் பட்டவர்களில் பெரும்பாலானோர் கென்யா காவல்துறையினரின் தாக்குதலில் இறந்துள்ளனர். கடந்த வருடம் மக்களிடம் இருந்து 2.7 பில்லியன் டொலர்களை வரிகளாக சேகரிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் 60 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
தற்போதைய போரட்டமும் அதன் தொடர்ச்சியாகவே மேற் கொள்ளப்படுகின்றது. பெருமளவான இளையோர் இந்த தடவை போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்கள் கடந்த வருடம் கொல்லப்பட்டவர்களின் படங்களையும் தாங்கி போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் அரச தலைவர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போரட்டத்தை முறியடிப் பதற்காக அரச படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.