உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடு கள் பொருளாதார தடைகளை விதித்த போதும், ரஸ்யா கடல் மூலம் ஏற்றுமதி செய்யும் எரி பொருட்களில் 80 வீதத்தை இந்தி யாவே கொள்வனவு செய்துள்ளது.
இந்தியாவின் நயாரா மற்றும் றிலையன்ஸ் ஆகிய நிறுவ னங்கள் ரஸ்யாவில் இருந்து 80 வீத எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ளன. இந்த வருடம் மட்டும் இந்தியா 231 மில்லி யன் பரல்கள் எண்ணையை கொள்
வனவு செய்துள்ளதாக த புளும் பேர்க் என்ற ஊடகம் கடந்த புதன் கிழமை(25) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் செல்வந்தரன முகேஸ் அம்பானியின் றியலை ன்ஸ் நிறுவனம் மட்டும் இந்த வருடம் 77 மில்லியன் பரல்கள் உரல்ஸ் எண்ணையை கொள்முதல் செய்துள்ளது. தின மும் 500,000 பரல்கள் எண்ணெயை கொள் வனவு செய்வதற்கு அம்பானியின் நிறுவனம் வருடத்திற்கு 13 பில்லியன் டொலர்கள் பெறுமதி யான உடன்பாட்டைச் செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் – ரஸ்ய போர் ஆரம்பமாகிய பின்னர் ரஸ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவு நாள் ஒன்றிற்கு 1.8 மில்லியன் பரல்களாக உயர்ந்திருந்தது. கடந்த மாதம் இந்தியாவின் பிரதான எரிபொருள் விநியோகஸ்தராக ரஸ் யாவே இருந்தது.