இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கொரிய அரசாங்கம் வாக்குறுதி

இலங்கை பணியாளர்களுக்கு கடற்றொழில் துறையில் 1047 வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கொரிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கொரிய மனிதவள திணைக்களத்திற்கு விஜயம் செய்த போது, திணைக்களத்தின் பணிப்பாளரினால் இவ்வாறான தொழில் வாய்ப்புகளை இலங்கை பணியாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்ததாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அதற்கான கொரிய மொழித் திறன் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இவ்வருடம் கொரிய மொழி புலமைப்பரீட்சைக்கு தோற்றிய தொழிலாளர்களுக்கு அடுத்த வருடம் வேறு துறையில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.