முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை இன்று விதித்துள்ளது.
நாளை காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.