எதிர்வரும் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது. மூத்த எழுத்தாளர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமாரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பூவரசி பதிப்பகத்தின் வெளியீடான இந்த நூல் கனகரவியால் எடுக்கப்பட்ட நேர்காணல்களில் இருபத்திரண்டு நேர்காணல்கள் உள்ளன. ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் பல முக்கியமானவர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.