யாழ்ப்பாணம்-ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தமிழ் நாட்டில் அகதிகளாக தஞ்சம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர்  கடல் வழியாக தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு சென்றடைந்து, கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.

புங்குடுதீவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரே இலங்கையில் இருந்து இவ்வாறு சென்றுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து ஒத்தப்படடிக்கு சென்ற தனுஷ்கோடி காவல் நிலைய  காவல்துறையினர் மற்றும்  குற்றப்புலனாய்வுத் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.