சர்வதேச விமானப் பயணம் இந்த வருட முடிவிற்குள்: Covid-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச விமானப் பயணத்தை அரசு வெகுவாக மட்டுப்படுத்தியுள்ளது.
ஆனால், வட அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற அதிகப்படியானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நாடுகளுக்குப் பறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக Qantas விமான நிறுவனம் கூறுகிறது.
அவுஸ்திரேலிய மக்களில் 80 சதவீதமானோர் இந்த வருட முடிவிற்குள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விடுவார்கள் என்றும் அதன் பின் சர்வதேச எல்லைகள் படிப்படியாகத் திறக்கப்படும் என்றும் National Cabinet தரவுகள் சொல்வதை அடிப்படையாக வைத்து இதனைக் கணித்துள்ளதாக சொல்லப்படுகிறது.